கேப்பை
முருங்கைக் கீரை செய்திருந்தாள்; பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கீரை எல்லாமே பச்சை நிறத்தில்! கூடுமானவரை பிரித்து எடுத்து சாப்பிட்டேன்; இருந்த போதும் ஒரு பச்சை மிளகாய்த் துண்டு கடிபட்டது; கண்கலங்கி தும்மல் வந்தது.
ஆபீஸில் 'வேக்யூம்' spelling கேட்கப்பட்டது; சிலர் Vacuum என்றும் மற்றும் சிலர் Vaccum என்றும் சொன்னார்கள்; Dictionary பார்த்து VACUUM தான் சரி என்று அறியப்பட்டது.
கேப்பை மாவு வாங்கி வந்தேன்; தண்ணீரில் சிறிது மாவைக் கரைத்து வைத்துக்கொண்டு, அடுப்பில் சிறிது தண்ணீரைக் கொதிக்க வைத்தேன். கொதிக்கும் தண்ணீரில் மாவு கரைத்த மாவை ஊற்றி கிண்டினேன்; சிறிது நேரத்தில் இறக்கி வைத்தேன்; இறக்கும் போது கையை சுட்டுக் கொண்டேன். சிறிது கேப்பைக் களியை தட்டில் போட்டுக் கொண்டு, குழி செய்து நல்லெண்ணை ஊற்றி உடைத்த மண்டை வெல்லத்தைப் போட்டு சூடாக இருந்தபோதே கொஞ்சம் சாப்பிட்டேன். மீதி இருந்த கேப்பைக் களியை மோரில் உருட்டிப் போட்டேன்; மறுநாள் கேப்பைக் கூழ் பிசைந்து, சின்ன வெங்காயம் கடித்துக் கொண்டு சாப்பிட்டேன்; சாப்பிட்ட அன்று இரவே தும்மல் கொஞ்சம் அதிகம் வந்தது; மறுநாள் சளி நிறைய பிடித்துக் கொண்டது; அவள் சொன்னாள், "கேப்பை ரொம்ப குளிர்ச்சி, கூடவே வெங்காயம், மோர்; எல்லாமே குளிர்ச்சி; ஒங்க ஒடம்பு சூட்டு ஒடம்பு; அதான் ஒத்துக்கல; இனிமே இந்த கேப்ப, கீப்ப செஞ்சீங்க...". அதற்கப்புறம் கேப்பை செய்வதில்லை. ஆனாலும் இந்த அனுபவமே போதும், இந்த ஜென்மம் முழுவதுக்கும்!

தமிழ் | tamilblog | தமிழ்ப்பதிவுகள் | tamilblogs | தமிழ்பதிவுகள் | tamil |
ஆபீஸில் 'வேக்யூம்' spelling கேட்கப்பட்டது; சிலர் Vacuum என்றும் மற்றும் சிலர் Vaccum என்றும் சொன்னார்கள்; Dictionary பார்த்து VACUUM தான் சரி என்று அறியப்பட்டது.
கேப்பை மாவு வாங்கி வந்தேன்; தண்ணீரில் சிறிது மாவைக் கரைத்து வைத்துக்கொண்டு, அடுப்பில் சிறிது தண்ணீரைக் கொதிக்க வைத்தேன். கொதிக்கும் தண்ணீரில் மாவு கரைத்த மாவை ஊற்றி கிண்டினேன்; சிறிது நேரத்தில் இறக்கி வைத்தேன்; இறக்கும் போது கையை சுட்டுக் கொண்டேன். சிறிது கேப்பைக் களியை தட்டில் போட்டுக் கொண்டு, குழி செய்து நல்லெண்ணை ஊற்றி உடைத்த மண்டை வெல்லத்தைப் போட்டு சூடாக இருந்தபோதே கொஞ்சம் சாப்பிட்டேன். மீதி இருந்த கேப்பைக் களியை மோரில் உருட்டிப் போட்டேன்; மறுநாள் கேப்பைக் கூழ் பிசைந்து, சின்ன வெங்காயம் கடித்துக் கொண்டு சாப்பிட்டேன்; சாப்பிட்ட அன்று இரவே தும்மல் கொஞ்சம் அதிகம் வந்தது; மறுநாள் சளி நிறைய பிடித்துக் கொண்டது; அவள் சொன்னாள், "கேப்பை ரொம்ப குளிர்ச்சி, கூடவே வெங்காயம், மோர்; எல்லாமே குளிர்ச்சி; ஒங்க ஒடம்பு சூட்டு ஒடம்பு; அதான் ஒத்துக்கல; இனிமே இந்த கேப்ப, கீப்ப செஞ்சீங்க...". அதற்கப்புறம் கேப்பை செய்வதில்லை. ஆனாலும் இந்த அனுபவமே போதும், இந்த ஜென்மம் முழுவதுக்கும்!

தமிழ் | tamilblog | தமிழ்ப்பதிவுகள் | tamilblogs | தமிழ்பதிவுகள் | tamil |