31 December 2005 

2006

Image hosted by Photobucket.comஆண்டுக்கு ஆண்டு

தேதிக்குத் தேதி

ஆயிரம் இருக்கு சுபதினம்

அடுத்தவர் வாழ்வை விரும்புவர் தமக்கு

ஆயுள் முழுக்க சுபதினம்.


- எப்போதோ கேட்ட 'சீர்காழி கோவிந்தராசன்' பாடல்.

30 December 2005 

வா...டி... மச்சி -- கா..த..ல்... பஜ்ஜி

Image hosted by Photobucket.com

காத்திருக்கிறேன்...

நீ வருவாய் என...

நான் காத்திருக்கிறேன்...

....

கரைந்து போகும் மணித்துளிகள்...

என்மேல் விழும் பனித்துளிகள்...

நான் காத்திருக்கிறேன்...

நீ வருவாய் என...

.....

உறங்கும் சூரியன்...

ஒளிரும் சந்திரன்...

கண் சிமிட்டும் நட்சத்திரங்கள்...

எல்லாவற்றையும் கண்டுகொண்டு...

நான் காத்திருக்கிறேன்...

நீ வருவாய் என...

.....

கையில் காசில்லை...

நீ வரவேண்டும்...

காசோடு வரவேண்டும்...

நீ தர வேண்டும்...

சுண்டல்காரன் கடன் அடைக்க...

நான் காத்திருக்கிறேன்...

நீ வருவாய் என...

வா...டி... மச்சி -- கா..த..ல்... பஜ்ஜி

22 December 2005 

லிட்டர்

நீரில் தெரியும் நிலாவில் கரை

கரை வேட்டியின் நிறம் வெள்ளை

வெள்ளை சுண்ணாம்பு காரம்

கார போண்டா உருண்டை

உருண்டை உலகம் சுத்துது

சுத்துற சக்கரம் வட்டம்

வட்டமான வடையில் ஓட்டை

ஓட்டை பானையில் நீர் தங்காது



| | | | | |

21 December 2005 

நத்திங் ராங் எபெளட் தட்...

நத்திங் ராங் எபெளட் தட்...
கல் குறைஞ்சா சிற்பம்
சிற்பம் குலைஞ்சா கல்லு!

பால் ஒறைஞ்சா தயிரு
தயிர கடைஞ்சா மோரு!

நூல் நெஞ்சா சேலை
சேலை பிஞ்சா தாவணி!

20 December 2005 

நன்றி கெட்ட உலகமடா...

நன்றி கெட்ட உலகமடா... Image hosted by Photobucket.com

பால் கொடுக்கும் பசு மாட்டுக்கு
ஒரு காப்பி போட்டுக் கொடுத்ததுண்டா?


முட்டை போடும் பெட்டைக் கோழிக்கு
ஒரு ஆம்லெட்டோ ஆஃப்பாயிலோ கொடுத்ததுண்டா?


.... உண்டா?

.... உண்டா?

.... உண்டா?

12 December 2005 

குயில் கட்டுமோ கூடு

குளம் நிறையத் தண்ணீர்
கரை நிறைய கற்கள்
எடுத்தான்; எறிந்தான்
நீரலைகள் குளம் நிறைய
Image hosted by Photobucket.com
எரியும் நெருப்பில்
எண்ணை ஊற்றவே
பற்றி எரிவது
நெருப்பு மட்டுமா?
Image hosted by Photobucket.com
காற்று வீசவே
நாணல் வளையவே
வளைய மறுப்பது
ஒடிய நினைப்பது
Image hosted by Photobucket.com
மண்ணைத் தோண்டியே
புதையல் எடுத்தனன்
மனதைத் தோண்டியே
ஞானம் அடைந்தனன்
Image hosted by Photobucket.com
வானம் பொய்த்தது
மும்மாரி பொழிந்தல்ல
நிறுத்தாமல் பொழிந்தே
நிற்கதியாக்கியே
Image hosted by Photobucket.com


| | | | | |

05 December 2005 

ஆறு

ஆறுமுகன் பாடல்கள் சில

Image hosted by Photobucket.com


ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும் - துன்பம்
வாராத நிலைதன்னைச் சேர்க்கும் - ஐயன்

(ஓராறு)

ஆராவமுதென அருள்மழை பெய்யும்
கூரான வேல் கொண்டு கொடுமைகளைக் கொய்யும்

(ஓராறு)

சுவாமி மலையில் சிவகுருவென்று திரு
சீரலைவாயிலில் சூரனை வென்று
தேமதுர மொழியாள் தேவானையை மணந்து
திருப்பரங்குன்றினில் தரிசனம் தந்த - அந்த

(ஓராறு)

மாமனைப்போல் இரு மாதுடன் கூடி
மாலையில் பழமுதிர்ச் சோலையிலாடி
மாமயிலேறிட திருத்தணியைத் தேடி
மோகமெல்லாம் தீர்ந்து ஆவினன்குடி சேர்ந்த

(ஓராறு)






ஆறுதல் அருள்வாய் ஆறுமுகா - உலகில்
வேறு துணையில்லை வேல்முருகா

(ஆறுதல்)

மாறுபடும் கருத்தை உடையவரும் கண்டால்
மயங்கிடும் அழகே வடிவெனக் கொண்டாய்

(ஆறுதல்)

இச்சையெனும் சக்தி வடிவான வள்வள்ளி
உலகை இயக்கும் சக்தி வடிவான தெய்வானை
பச்சை மயில் பரிவுடன் பக்திதரும் சக்தி
பகுத்தறியும் ஞான சக்தி வடிவேலா

(ஆறுதல்)

குன்றுதோறும் குடியிருக்கும் குமரா - உள்ளக்
கோயிலிலே குடியிருக்க வருவாய் - மனிதக்
குடும்பமெல்லாம் நிம்மதியைத் தருவாய் - மனிதக்
குடும்பமெல்லாம் நிம்மதியைத் தருவாய்





ஆறுமோ ஆவல்
ஆறுமுகனை நேரில் காணாது

(ஆறுமோ)

ஏறு மயிலேறி குன்றுதோறும் நின்றாடியவன்
பெரும்புகழும் தெரிந்துமவன் பேரழகைப் பருகாமல்

(ஆறுமோ)

ஞான குருபரன் தீனத்தருள் குகன்
வானவரும் தொழும் ஆனந்த வைபோகன்
காணக் கிடைக்குமோ கூறுதற்கில்லாமல்
அற்புத தரிசனம் கற்பனை செய்தால் மட்டும்

(ஆறுமோ)



lyrics copied from: http://mysite.verizon.net/vze2my9a/tamillyrics/tdsa/tamilunicode/mur_idx.htm

 

புலி வால் கல்யாணம்

வால்-னு சொன்னா, எனக்கு ஒடனே ஞாபகத்துக்கு வர்றது, வால் தான்!

நா எத்தனையோ வால் பாத்திருக்கேன்;

பல்லி வால், பாம்பு வால்,
எலி வால், புலி வால்,
குதிரை வால், குரங்கு வால்,
நாய் வால், நரி வால்,
Dove tail, Cow tail, Cocktail
இப்டி எத்தனையோ....

*** *** ***

செல உதார்மொழிகள்! கூட கேட்ருக்கேன்; இப்டி,

சிங்கத்துக்கு வாலா இருக்கறத விட,....

தல இருக்கப்ப வால் ஆடலாமா?

*** *** ***

செலபேர வையிறது கூட உண்டு; இப்டி,

சுத்த அறுந்த வாலா இருக்கியே!

வால சுருட்டிக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா?

எங்கிட்ட வாலாடுன, வால ஒட்ட வெட்டிருவேன், ஜாக்ரத!!

*** *** ***

பல்லி வால் துண்டிச்சாலும் திரும்ப வளர்ந்துடும்!

யானை வால் மோதிரம் போட்டா நல்லதுன்னு (யாருக்கு?) கூட கேள்விப்பட்ருக்கேன்

*** *** ***

? கேள்விக்குறி கூட நிறுத்திவெச்ச வால் மாதிரி எனக்குத் தெரியுது!

! ஆச்சர்யக் குறி கூட பெண்டு நிமிர்த்தப்பட்ட வால்-னு சொன்னா அது அவ்ளோக்கா தப்பில்ல!

\\ ரெட்டை வால் குருவி-ன்னு சொல்றது கூட, இருதலைக் கொள்ளி எறும்பா மனுஷன் படுற அவஸ்தைக்கு கொடுக்கப்பட்ட ஒரு உருவகமான உவமானமோன்னும் தோணுது!!!

இப்டி எத்தனையோ சொல்லலாம்...

*** *** ***

சரி, இப்ப சொல்ல வந்தது என்னன்னா..


இதுதான்!


**** **** ****
தலைப்பு, இது ஒரு மலையாள திரைப்படத்தோட பேர், no relations

03 December 2005 

உயர்ந்த மனிதனாக உருவாக்கும் கிரகங்கள்

லட்சியங்கள் லட்சங்களாக மாறினால் தான் லட்சியத்துக்கும் மதிப்பு. லட்சியங்கள் கனவாக மாறி கனவுகள் நிஜங்களாக மாறி, நிஜங்கள் நிமிடத்தில் நிழல் வடிவில் மாறி நித்தமும் கண்ணாமூச்சி ஆடுகின்றன. உழைப்புக்கு விலை மலிந்துவிட்டதா? இல்லை உடையவன் சரக்கு விலையாகவில்லையா? திறமை இருந்தும் ஏன்? தேக்கநிலை சிந்தனை சரியாக இருந்தும், செயல்படும் ஆற்றல் இருந்தும் எதனால் தடை? தடுப்பது எது? எங்கிருந்து இந்த ஆற்றல் புறப்படுகிறது, எந்த கிரகத்தின் அதிர்வுகள் மனிதனை அதிகமாக பாதிக்கின்றன. கட்டுரை வழியாக தெளிவாக காண்போம்.

சமுதாயத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு எந்த அளவுகோல் கொண்டு நிர்ணயிக்கப்படுகின்றது. "பணம்'' என்ற அச்சிடப்பட்ட காகிதத்தால்தான். ஒருவன் வாழ்க்கையில் வெற்றி பெற்றான் என்பது அவனது "பொருளாதார நிலை'' ஒரு வலுவான சக்தியாக நம்முன் ஒரு பொய்யான இரும்புத்திரையை உருவாக்கிவிடுகிறது. அவனிடம் உள்ள பணம் நல்லவழியில் வந்ததா என்பதை பற்றி யாருக்கும் கவலையில்லை. அவனுக்கு சமூகத்தில் கொடுக்கும் பட்டம் "பிழைக்கத் தெரிந்தவன்'' புத்திசாலி, "உயர்ந்த மனிதன்''.

மெத்த படித்தவன் பல்துறை ஞானம் உள்ளவன், மேதைகள் எல்லாம் பணம் சம்பாதிக்க லாயக்கற்றவர்களா? இல்லை! அவர்களால் சம்பாதித்து பொருளாதாரத்தினை ஸ்திரப்படுத்திக் கொள்ள முடியவில்லையா? ஓ! மனிதனே, பணத்தை தேடுவதை விடுத்து அறிவை தேடிப்பாருங்கள்! மகத்தான மனித மூளையின் செல்களை திறந்துவிடுங்கள்! அது பல கோடான கோடிகளுக்கு சமம்.

கீதை சொல்கிறது "எதைக் கொண்டு வந்தாய், இன்று உன்னுடையது நாளை வேறொருவருக்கு என்று.'' இந்த கூற்று பணத்துக்கும் பொருந்தும். இருப்பினும் சமுதாயம் பணக்குவியல்களைத் தேடி ஓடுவது ஏன்? பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை என்றார் குறள் முனிவர்.

பொருளின் அளவுகோல்தான் என்ன? உண்ண, உடுத்த, உறைவிடத்துக்கென்று பணம் தேவைப்படுகிறது. மறுப்பதற்கில்லை. பணம் வாழ்க்கையின் ஒரு அங்கம். பணமே வாழ்க்கையல்ல. பணம் இல்லாவிட்டாலும் வாழ்க்கையில்லை. அளவோடு இருக்கும் பணம் நம்மை காப்பாற்றும் அதிகமானால் நாம் பணத்தை காக்க வேண்டும். இந்த முரண்பாடுகளால்தான் மனிதனின் மனம் மரணித்துப் போகிறது. அறிவு தத்தளிக்கிறது.

ஓயாமல் தத்தளிக்கும் மனத்தை தன்மைப்படுத்தும் கிரகம் எது? அது எந்த நிலையில் இருப்பின் பணம் பெட்டியை நிரப்பும்? இவை எல்லாவற்றையும்...

மேலும்...

Source:



| | | | | |

02 December 2005 

ஒரு மழைப்பூச்சியின் புலம்பல்!

மழை வெள்ளம்
புயல் காற்று
இடி மின்னல்

வருமா வராதா
வந்த எந்தப் பக்கம்

என்கிட்ட கேக்கிறியே
என் தலையை வெட்டவா!

என்று தணியும் இந்த
வானிலை அறிக்கை தாகம்!!


மழைமொழி: தும்பிகள் கூட்டமாய்ப் பறந்தால் மழை வருமாம்!



| | | | | |

About me





Tamil Blogs Portal - தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் வாசல்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Technorati Blog Finder

Powered by Blogger
Creative Commons License
This work is licensed.
Powered by Blogger
and Blogger Templates